வாஸ்கோ போப்பாவின் கவிதைகள், ஒவ்வொரு
வாசகனையும் வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களைத் திரும்பப் பார்ப்பதற்குத் தூண்டுகின்றன. அவருடைய கவிதைகள் தத்துவத்தையும் கற்பனையையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கின்றன. அவர் எளியதின் மூலம் ஆழமானதையும், செர்பிய மரபின் மூலம் புதியதையும் வழங்கியது, அவரின் கவித்துவத்தை நிரந்தரமாக வசீகரமுடையதாக்கியிருக்கிறது...
வாஸ்கோ போப்பாவின் படைப்புகள் செர்பிய மொழி மட்டுமல்லாமல் அதற்கு அப்பால் உள்ள கவிஞர்கள், எழுத்தாளர்களின் தலைமுறைகளையும் பாதித்துள்ளன. அவரது தனித்துவமான குரல், அசாதாரணமான புதுமையான பாணி செர்பிய இலக்கியத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது, மேலும் அவருடைய கவிதைகள் உலகெங்கிலும் உள்ள வாசகர்களைத் தொடர்ந்து வசீகரித்து வருகின்றன. போப்பாவின் படைப்புகள் செர்பிய மொழியின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பற்றிய ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாகவும், மனித நிலையைப் பற்றிய ஆழமான பார்வையை வழங்குவதாகவும் ஒரே சமயத்திலிருக்கிறது...
"வாஸ்கோ போப்பாவின் தனித்துவமிக்கக் கவித்துவத்தின் கனவிடைத் தோய்தல்"
முன்னுரையில் - எம்.டி. முத்துக்குமாரசாமி
..
முன்னட்டை ஓவியம்: வாஸ்லி காண்டின்ஸ்கி
உள்பக்க கோட்டுச்சித்திரங்கள்: பி.எஸ். நந்தன்
அட்டை வடிவமைப்பு: ஆர்.சி. மதிராஜ்
Be the first to rate this book.