காஃப்கா 1912இல், 'காணாமல் போன மனிதன்' என்ற அவருடைய முதல் நாவலை எழுதிக் கொண்டிருந்தபோது, திடீர் உத்வேகத்துக்கு ஆளாகி, 'உருமாற்றம்' நாவலை எழுதத் தொடங்கி, இரண்டு அல்லது மூன்று அமர்வுகளில் அதை எழுதி முடித்தார்.
காஃப்காவின் இலக்கியப் படைப்புகளில் உருமாற்றம் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இது அவருடைய மிகப் பிரபலமான படைப்பும் கூட. இது இலக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி, காஃப்காவுக்கு மிகப் பெரிய இலக்கிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. உருமாற்றம் நூறாண்டுகளைக் கடந்த பிறகும் இன்றும் அனைவராலும் கொண்டாடத்தக்கதாக உள்ளது.
- கேசவமணி
Be the first to rate this book.