சீறிவரும் செல்வர்களை எதிர்த்து நின்று தாக்கினர், கொல்லப் பட்டனர், எனினும் அந்த முயற்சியின்போது பூத்த வீரமும், தியாகமும், விழிப்புணர்ச்சியும், மன எழுச்சியும், ஏழையரை வாழ்விக்கத் தயாரிக்கப்பட்ட மாமருந்து ஆயிற்று. பெருநெருப்பில் சிக்கி சிறு குழந்தையைக் காப்பாற்ற, தீச்சுழலுக்கு இடையே புகுந்து, உடல்கருகி, வெந்து சாம்பலாகும் வீரம்போல், இரு சகோதர்கள், அறப்போர் நடத்தினர்.
Be the first to rate this book.