நீங்கள் செல்வந்தராக விரும்புகிறீர்களா?
இந்த கேள்விக்கு பெரும்பாலோர் "ஆம்!" என்றே பதிலளிப்பார்கள். செல்வந்தராக வேண்டும், வாழ்க்கையை மாற்றி நினைத்தபடி வாழவேண்டும் என்ற கனவு அனைவருக்குமே உள்ளது. ஆனால், ஏன் சிலருக்கு மட்டுமே இது சாத்தியமாகிறது? ஏன் மற்றவர்களால் இதை அடைய முடியவில்லை?
உண்மையில், செல்வந்தமாக மாற்றுவது அனைவருக்கும் சாத்தியம்! அதற்குத் தேவையான ஒரே விசை – செல்வத்தை பற்றிய இயற்கையின் விதிகளை சரியாக புரிந்துகொள்ளுதல்!
இந்த உலகில் அனைவருக்கும் செல்வத்தின் உண்மையான ஞானம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தப் புத்தகம் மிக எளிய முறையில் இந்த இரகசியங்களை பகிர்கிறது. இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் வேதவாக்கு! இயற்கையின் பேருண்மை!
இந்த நூல், நம் பாரதத்தின் மகான்கள் வழங்கிய செல்வ ஞானத்தின் சாரம் ஆகும். இதில் கூறப்பட்ட ஏதேனும் ஒரு விஷயத்தை மட்டும் ஒருவரால் நடைமுறைப்படுத்த முடியுமானால், செல்வம் அவரது வாழ்வில் நிரந்தர வாசம் செய்யும்!
செல்வம் உங்களை தேடி வர தயாராக இருக்கிறது! அதை திறந்த மனதுடன் வரவேற்க தயாராகுங்கள்!
வாழ்த்துக்கள்!
~ குரு மித்ரேஷிவா
Be the first to rate this book.