ஆண், பெண் உறவுகளில் பொதிந்திருக்கும் ரகசியமான ஒன்றை – பிரிவிலிருந்து சுரக்கும் அழியாத சுகத்தை – மனித மனம் சுமப்பதில் இன்பத்தையும் துன்பத்தையும் சேர்ந்தே காண்கிறது. அதில் பரவசம் அடைகிறது. அற்பப் புல்லின் மீது இருக்கும் பனித்துளியின் காலத்தைவிட மனிதனுடைய மகிழ்ச்சியின், துக்கத்தின் காலம் குறைவானதாய் இருந்தாலும்-மனிதன் தனக்குள் பத்திரப்படுத்திக்கொள்ள முடிவதாய் ‘காதலை’க் காட்டுகிறார் துர்கனேவ். ரைன் நதியைப்போல ஜீவநதியாய் காதலைப் பெருக்கெடுக்க வைக்கிறார்.
Be the first to rate this book.